Wednesday, September 22, 2010

                         வாழிஸ்ரீ ரமண ஜோதி வள்ளலே வாழி வாழி
                         வாழிநீ கால மூன்றின் வரையறை கடந்தோய் வாழி
                         வாழிநீ புவனகோடி வடிவெலா நிறைந்தோய் வாழி
                         வாழிநீ யூழி வெள்ள மதிற்கெடா வங்கம் வாழி!
 
                         வாழிஸ்ரீ ரமண ஞான வாரிதி வாழி வாழி
                         வாழிஸ்ரீ ரமண நாம மந்திரம் வாழி வாழி
                         வாழிஸ்ரீ ரமண மூர்த்தி வாழியென் பார்நீ டூழி
                         வாழிநீ எம்மைக் காக்கு மகாகுரு ரமண வாழி!

No comments:

Post a Comment